மழையில் நனையும் குடை!


அழுக்கு வீதிகள்,
ஆபாசம் காட்டும் சுவரொட்டிகள்,
அரசியல்பேசும் ஒலிபெருக்கிகள்,
ஆன்மீகம்பரப்பும் ஆலயமணிகள்,
நிறைந்துவழியும் குப்பைத்தொட்டிகள்,
விரைந்துசெல்லும் வாகன நெரிசல்கள்,
புகைக்கும் பேருந்து,
பொய்பேசும் ஜோசியக்கிளி,
காத்திருக்கும் பயணிகள்,
கையேந்தும் பிச்சைக்காரர்,
முடிவில்லா அவலங்கள்
எனக்குள் கவிதையாய்!
கொட்டும் மழையில்
குடைபிடித்தபடி நான்,
குடைக்குள் மழையாய் - நீ.
மழையில் நனையும் குடையாய் நான்.


Comments

  1. வேறு வழியில்லை... எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப வருஷத்துக்கு முன்னால ரசிச்சது.

      Delete
  2. இந்த நீ அப்பிடீன்னு சொல்லுரிகளே, அது யாருன்னு சொல்லியே எசமான்
    தெரிஞ்ச தங்கமணிகளுக்கு எஸ் எம் எஸ் பண்ணலாம்

    ReplyDelete
  3. 15-20 வருஷத்துக்கு முன்னபோய் பாக்கனும் டையம் இருக்கா?

    ReplyDelete
  4. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment