கண்ணாடி.




1.
முட்டி மோதி ,
முழுதாய் நின்று
எட்டிப்பார்கையில்
முகமில்லை
கண்ணாடியில் - தெரிவது
இழப்பின் சோர்வில்,
வலியின் வெறுப்பில்,
காழ்ப்பின் துரோகத்தில்
தீட்டப்பட்ட வண்ணங்களின்
குறுட்டு ஓவியம்.


2.
பார்க்கும்போது
முகம்காட்டும்
கண்ணாடிகள்
பார்க்காதபோதுகளிலும்
பிரதிபலித்துக்கொண்டுதான்
இருக்கின்றன
நாம் பார்க்காத
ஏதோஒன்றை.

3.
முகம்காட்டும்
கண்ணாடிகள் -  நம்
முகம்மட்டும்
காட்டுவதில்லை - தன்
முகத்தையும்
பார்த்துக்கொள்கிறது.

4.
சிரிப்பை
அழுகையை
சோர்வை
வெறுப்பை என‌
எதிர்படுவோரிடமெல்லாம்
ஏதோ ஒன்றை காட்டிவிடுகிறது
கண்ணாடி,
அவரவர் எண்ணம்போல்...


Comments