அம்பெத்கார் ...டூன்

சர்ச்சைக்குரிய நேரு, அம்பெத்கார் கார்டூனை நீக்கக்கோரி எழுந்த பெருத்த அமளிக்குப்பின் அக்கார்டூன்களை பாடதிட்டத்திலிருந்து நீக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சியே. பாராளுமன்றத்தில் அனைத்துக்கட்சி MP க்களும் ஒட்டுமொத்தமாய் குரல் கொடுத்திருப்பதைபார்து யாரும் பூரித்துபோய்விடத்தேவையில்லை, திருமாவளவன் போன்ற தலித்மக்களின் தலைவர்கள் இந்த சர்ச்சையை எழுப்பியதற்கும் மற்ற MP க்கள் அதற்கு ஆதரவாய் குரல்கொடுத்ததற்கும் உள்ள வித்தியாசம், மற்றகட்சிக்கு இது தலித்மக்களின் வாக்கு வங்கியை பங்குபோட்டுக்கொள்ள உதவும் இன்னொரு விஷயம். ஆனால் தலித்மக்களைப் பொருத்தவரை கடந்த நூற்றாண்டுகால அனுபவங்களும் அவமதிப்புக்களும் இன்றும் இவ்வாறான நவீனமுறைகளில் அறங்கேரிக்கொண்டுதான் இருகின்றது அதன் ஒரு பரிமாண‌மாய்தான் தாங்கள் கடவுளாக கருதும் பாபா சாகிலை மாணவர்கள்  மத்தியில் அகவுரவப்படுத்துவதற்காகவே இந்த கார்டூன் சேர்க்கப்பட்டிருக்குமோ என எண்ணவைப்பது இயல்புதான் என்பதை நாம் ஒப்புக்கொள்த்தான் வேண்டும். சம்பந்தபட்ட கார்டூனில் நேரு காண்ஸ்டிடூஷனை விரட்டினாரா அம்பெத்காரை விரட்டினாரா என்பது அன்றைய அரசியல் தெரிதவர்களுக்குத்தான் விளங்கியிருக்கும், இன்று இதை ஒரு பொதுவான புரிதலுடன் பார்போமேயானால் அம்பெத்கார் நத்தையை விரட்டுகிறார் நேரு அம்பெத்காரை விரட்டுகிறார்  என்றுதான் புரிந்துகொள்ளப்ப்டும்.

1995ல் வெளியாகிய முத்து திரைப்படம் அன்றைய அரசியல் சூழ்நிலையில் மக்களால் புரிந்துகொள்ள‌ப்பட்ட விதத்திற்கும் இன்றைய தலைமுறை அதை புரிந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.இதை புரிந்துகொண்டால்தான் இந்த கார்டூனை நீக்கக்கோருபவர்களின் மனநிலையும் புரியும்.

Comments