இறகு


எங்கோ பறந்து
எப்போதோ உதிர்ந்த
பறவையின் இறகொன்றை
கொண்டுசேர்த்தது காற்று
என் கையில்,

பறவையின் அழகிற்கு
பட்டயம் கூறியது
இறகின் வண்ணம்,

எறிந்துவிட மனமின்றி
எடுத்துவந்தேன் வீடுவரை.

"அப்பா.. அப்பா..
நம்மவீட்டு புறா
காணாம போச்சுபா"
கால்களை கட்டிக்கொண்டு
அழுதாள் 6 வயது மகள்,

தொலைந்துபோன
பறவையின் மிச்சமாய்
எடுத்துநீட்டினேன்
இறகை.

Comments